பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 மாமல்லன் வீட்டில் அடியெடுத்து வைத்தான். முகப்பு விளக்கு அழகாக ஒளி சிந்தியது. 'வா தம்பி” என்ருள் பெற்றவள், வாஞ்சை பொங்க. 'அம்மா, எனக்காகவா காத்துக்கிட்டு வாசலி லேயே நிற்கிறீங்க ? என்று கேட்டான் மகன். "ஆமா, ஆமா. இன்னும் கொஞ்ச நாளேக்குத் தானே எனக்கு இந்திப் ப்ாக்கியம் கிடைக்கும் ?... அப்புறந்தான் என் பாக்கியத்திலே பங்கு கொள்ள மேகல்ை வந்துவிடுவாளே !” வெள்ளைப் புடவையைக் கொய்தெடுத்து உதடுகளை மறைத்தாள் கோசலை அம்மாள். போங்க, அம்மா !” -- 'தம்பி, உன் கிட்டே நிரம்பப் பேசணும். முதலிலே, கை கால் முகம் அலம்பிக்கிட்டு வா, சாப்பிடலாம். மணி ஒன்பதாகப் போகுது.' "ஊம் கொட்டிக்கொண்டே பின் தொடர்ந்தான் அவன். : . அந்நாளில் அம்புலியின் எழில் காட்டி அன்னம் பிசைந்து ஊட்டிய அதே மாணிக்கக் கைதான் அன்றும் சோறு பரிமாறியது. பசி உணர்ந்து, ருசி அறிந்து, தெய்வ மணிக்கரத்தின் பொற்பை யூகித்து அவன் உணவு கொண்டான். - - தம்பி ! ‘ என்னம்மா ?? . விளித்த குரல் துண்டாக நின்றது. விடுக்கப்போகும் விளுவுக்கு விடை என்ன சொல்வதென்று யோசிக்கு முன், அன்னையின் ஆதுரம் என்னவாயிருக்குமென்ற சிந்தனை அவனைத் தன்வயப்படுத்தியது. சூன்ய வெளியை மென்று விழுங்கி ஏப்பமிட்ட மெளனத்தைத் துண்டாட எண்ணி இதழ் விட்டு இதழ் பிரித்தான்