பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8} பாடாய்ப் படுத்திவிட்டது. தனிமை சில சமயங்களில் மட்டுமே இன்பம் தர வல்லது. அப்போது மேகலைக்குப் யாழ் வெளியில் நாட்டம் கிடையாது. தனிமைக்கு மாற்று மருந்தாக அமைய துணை தேவைப்பட்டது. அவளுக்கு உற்ற துனைக்கு அது சமயம் மாடி ஓய்வளித்துக் கொண் டிருந்தது. மத்தியான்னம் நான் அத்தான் கூடச் சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்ததை அத்தை, அம்மா எல்லோரும் பார்த்திருப்பாங்களோ? என்ற கேள்வி அவளுடைய பெண் மனத்தில் பயத்தை உண்டாக்கவில்லை ; பயிர்ப்பை உற்பத்தி செய்தது. பெண்மை நாணத்தைத் தோழி யாக்க முனைந்தது. ஆளுல், அவளுக்குத் தோழியாக அமைய ஓடோடி வந்தவள் சிந்தாமணிதான். ஒளி சிந்தி எரிந்துகொண்டிருந்த மின்சார தீபங்கள் ஆசைந்தாடித் தவழ்ந்து வந்துகொண்டிருந்து பூந் தென்றல், எழில் கூட்டி இன்ப நினைவு மீட்டிக்கொண் டிருந்த திருமண மலர் மாலைகள், செந்நிறக் கழுத்தில் பொன் நிறம் கொண்டு விளையாடிய தாலி, சொர்க்கத் துக்கு இடம் மாற்றும் மாய சக்தி பூண்ட வாசனைத் திரவியங்களின் சுகந்த வாடை, மணப்பந்தல் அறிமுகப் படுத்திய புதிய வாழ்க்கைத் தோழரின் ஆசைமுகம் ஆரம் பித்து வைத்த வருங்காலக் கனவுக் கூட்த்தின் இன்பக் காட்சிகள்...!-நாளுவிதமான நினைவுகள் அவள் நெஞ் சில் நிலைத்தன. ஆனபடியால், சிந்தாமணி அருகில் வந்து நின்றதை அவளால் கவனிக்க முடியாமல் போய் விட்டது. " மேகலை !' என்று விளித்தாள் சிந்தாமணி. மேகலை ஏறிட்டுப் பார்த்தாள் கண் கடையில் மென்னகை படர்ந்திருந்தது. " பால் சாப்பிடு, மேகலை!" வயிறு காலியாக யிருந்த உண்மை அவளுக்கு நினை வூட்டப்பட்டது. காலையிலிருந்து மேகலை நோன்பு, இருந்தாள். தாலி காக்க விரதம் காத்தாள். மா திாரணம் நிகழ்ச்சிக்குப் பிற்கு பால் பழம் தெர கள். கணவன் மனைவி இருவரும் தனித்தனியே உ! கொண்டனர். உயிரும் உயிரும் இரண்டறக் கலக்க