பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 கையால் வாசமுள்ள பூச்சூட்டுவதற்குள் பட்டபாட்டை எண்ணின்ை மாமல்லன் காதல், கனவு, வாழ்க்கை இந்த மூன்றும் விசித்திரமாகத்தான் அமைந்து விடு கின்றன. எனக்குரிய முறைம்ைப் பெண்ண்ே எனக் குரியவளாக ஆக்கிக் கொள்வதற்குள் நான் எத்தனை போராட்டங்கன்ச் சமாளித்தேன்..? அதுபோலத்தான் இப்போது குலோத்துங்கனின் நிலையும் அமைந்திருக் கிறதோ? ஆம்; அவ்வாறு தான் இருக்கும் ! என்ற சிந்தனையும் ஏற்பட்டது. o . மேகலை காத்துத் தவம் கிடந்தாள், மாமல்லனுக் காகவே இதோ, இந்த குலோத்துங்கனுக்காக சிந்தா மணி காத்துத் தவம் செய்கின்ருள் ! ரண சிகிச்சையின் முடிவைத் தெரிந்து கொள்வதற். குள் உற்ருரின் உயிர் ஊசலாடும். மாமல்லனின் நில யும் இதுதான். - - ம் , மாமல்லன் எண்ணியது இப்படித்தான். 'தம்பி, அடுத்த வாரம் நாமெல்லாரும் பட்டனத்துக்குப் போனதும், முதல் வேலையாக நம்ப சிந்தாமணியோட அத்தானைத் தேடிப் பிடித்து அவர்கள் இரண்டு பேருக் கும் கல்யாணம் செஞ்சிடணும் ! என வெளியிட்ட தன் ஆன்னையின் பேச்சும் சமயம் பார்த்துக் கடன் ஆற் றியது. . - f & ... .so சிந்தாமணியின் நெடுந்தவம் பலிக்கும் நேரம் வந்து விட்டதா? உமையவுளின் கனவை நனவாக்க ஓடோடி வந்த சிவபெருமானைப்போல சிந்தாமணி இருக்கும் இடம் நாடி வந்திருக்கிருஞ குலோத்துங்கன்...: குலோத்துங்கனும் சிந்தாமணியும் தி ரு மண க் கோலம் ஆண்டு மகிழும் நிகழ்ச்சியினை மனத் திரையில் சித்திரமாக்கிப் பார்த்தான் அவன். கற்பனையின் எழி லும் இன்பமும் அற்புதம்தான் ! : దాతా அலைக்குத் தாலாட்டுப் பாடவென்று மாய மாகத் தோன்றிய திங்களின் ஆனந்தத்துக்கு அவனு டைய மகிழ்ச்சி குறைந்ததன்று. . . .