பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 வெற்றி மேல் வெற்றி பெற...

தன்னலத்தில் உறங்குபவன் தீமையுடன் ஈடுபாடு கொள்கிறான்;

இருளினால் சூழ்ந்து கொள்ளப்படுகிறான்; மிக்க துயரத்தால் சுற்றி வளைக்கப்படுகிறான்; இதுவே, தூங்கிக் கொண்டிருப்பவனின் நிலைமை,

அவனுக்குள் தீமையின் தொடக்கம், தொடர்ச்சி, முடிவு, எல்லாமே மறைந்திருக்கிறது.

அதனால், உறங்குபவர்கனே, எழுங்கள்! இச்சையெனும் உறக்கத்திலிருந்து எழுங்கள்! பகை எனும் வீண் கனவிலிருந்து விடுபடுங்கள்! கவலை தரும் கனவுகளான பேராசை, தன்னலத் திற்கு இடமளித்தல், செருக்கு, தற்பெருமை இவற்றிலிருந்து வெளியே வாருங்கள்!

நம்பிக்கையின்மை எனும் பகல் கனவை உதறித் தள்ளுங்கள்!

தவறுகளாலும் சாக்காட்டைப் பற்றிக் கொண்டிருந்த துயராலும் அடிப்படை இல்லாத நம்பிக்கையினாலும் மயக்கம் கொள்ளாதீர்கள்!

தன்னல உறக்கத்தை முடித்துக் கொண்டு, மெம்ய்மை பான உண்மையால் எழுந்திருங்கள்!

தன்னலத்தின் முடிவே உண்மையின் தொடக்கம்.

புகழ்மிக்க உண்மையைக் காணுங்கள்! நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள், கனவு கண்டு இகாண்டிருக்கிறீர்கள், எழுங்கள் எழுங்கள்! எழுங்கள்:

உலகை இசையால் நிரப்புங்கள்.

வாருங்கள், வந்து வெளிச்சத்தில் குடியிருங்கள்;