பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 வெற்றிமேல் வெற்றி பெற.

மோதல்கள் போன்றவற்றின் உச்சக்கட்ட தடுமாற்ற நிலையில்,

ஒருவர் இறங்கி வருகின்றார் அன்பு என்ற பெய்ருடன் அவருடைய நோக்கமும் குறிக்கோளும் நட்பமைதியே’ அவரின் நிறைவு-ஒற்றுமை.

இவற்றின் இடையில் நடந்து வருகின்றார் அவர்; அவரை மனிதர்கள் அறிவார்கள்; ஆனால், அவர்களின் வலுவின் மையினால் அன்று;

ஆனாலும், அவரின்,தொடுகையால் குருடர்கள் கண் பார்வை பெருகிறார்கள்; செவிடர்களால் கேட்க முடிகிறது, தொண்டிகள் நடக்கிறார்கள்.

அமைதியாகவும் புனிதமாகவும் தனிமையான நெஞ்சம் களில் கருணை புரிகிறார்;

அங்கும் இங்குமாகத் தொண்டர்கள், கேட்டுப் பின் தொடர்கின்றனர்.

தொண்டனுக்கு, அவனின் ஆசானையும்-ஆசானுக்கு அவரின் தொண்டனையும் தெரிகிறது.

அவரால் தெரிவு செய்யப்பட்ட ஒரு சிலர் என்னைத் தொடருங்கள்’ என்ற அவரின் கட்டளையைக் கேட்காமல் இருந்ததில்லை.

உண்மையாகவும் உறுதியாகவும் அவரைப்பின்தொடர்ந் துள்ளனர்.

இன்னமைதியே உருவானவரின் திருமுகத்தை அவர் கள் உற்று நோக்கியுள்ளனர்.

முழுமை நிறைந்த அவரின் திருவடிகளில் உட்கார்ந்து கொண்டனர்.