த. கோவேத்தன் 127
பெருந்தன்மையுடன் உனது நெஞ்சத்தை மிகக் கடின மானதாகவும் பிடிவாதம் உள்ளதாகவும் ஆக்குதல்
இவை உனது உள்ளுயிரில் கறையை உண்டாக்கி அமைதியிலிருந்து எங்கோ இழுத்துச் சென்று விடும்.
தூய்மைக்கான வழி எவ்வளவு பெரும் புகழுடையது என்பதை நன்கு கவனித்துப் பார்;
உண்மை எனும் கருவூலம் எவ்வளவு வனப்பு நிறைந்தது!
புனிதத் தன்மை எனும் ஆடை எவ்வளவு அழகானது மகிழ்ச்சியை அளிப்பது!
பகை, இச்சை, தீய எண்ணம்-இவற்றிலிருந்து விடுதலை பெறுவது எவ்வளவு இனிமை, எவ்வளவு மகிழ்ச்சி!
இன்பங்களுக்கும் வெகுமதிகளுக்கும் ஆசையற்று இருப்பது எவ்வளவு நன்மை, எவ்வளவு களிப்பு!
மற்றவர்களிடம் உள்ள தீமைகளைப் பெரிதுபடுத்தாமல் இருப்பது எவ்வளவு சிறப்பானது, மகிழ்ச்சிகரமானது!
நான் எனும் தற்பெருமையை அடியோடு அகற்று; விளைவு எவ்வளவு சிறப்பு: எத்தகைய அமைதி:
தூய்மையான உள்ளத்தினால் உண்டாகும் பேரின்பம் எண்ணிப் பார்ப்பதற்கே அப்பாற்பட்டது;
தீமையில்லாத மனத்தின வனப்பு ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாத அளவிலானது;
என்றும் நிலைத்திருக்கும் நேர்மையே மேன்மை மிக்க பே ரின் பம்!
நட்பமைதியை ஏற்படுத்துவதே உயர்வான தூய்மைச் கறைபடியா வாழ்க்கையே களிப்பை உண்டாக்கும். தீமை இல்லாத நெஞ்சயமே சீரறிவு மிக்கது,