86 வெற்றிமேல் வெற்றி பெற...
ஆனால் இப்போது, எம்மிடமிருந்த தவறு கானும் கண்களைப் பறித்து விட்டோம், அதனால் நாம் எல்லோ ருக்கும் மேலே உள்ளதும் வல்லமை நல்லதைக் காண் «ξ63μοπιά.
மனிதனுக்கு மனிதன் கொண்டுள்ள பகையை நீக்கி ஒற்றுமையாக்குவது உண்மை;
அது, மனிதனைப் பேருலகுடன் ஒற்றுமைப் படுத்து கிறது;
நல்லறம் பற்றிய அறிவை அவனுக்கு அளிக்கிறது;
மறைந்திருக்கும் அறமுறையை எல்லா நிகழ்வுகள் மூலமும் வெளிக்கொணர்கிறது.
ஒய்வின்மை, சீற்றம், குழப்பம்-இவற்றை உண்டாக்கு வதெல்லாம் குற்றத்தில் உறைந்துள்ளன.
நேர்மையின்மை, குழப்பம், கருத்து வேறுபடும் தன்மை களை உடையவன் எப்போதும் இடர்பாடுகளாலும் கலக்கத் தினாலும் பாதிக்கப்படுவான்.
ஆனால், எவன் அறத்தையும் முறைமையையும் ஒழுங்கையும் கொண்டுள்ளானோ அவன் அமைதியில் நிறைவுறுவான்
தவறு தவறறையே காண்கிறது, உண்மை உண்மை யையே காண்கிறது.
தவறு இருளாக இருப்பதனால், ஒளியை ஊடுருவிப் பாய, அதனால் முடியாது;
ஆனால், உண்மை ஒளியுள்ளதாக இருப்பதால், இருளை ஊடுருவிச் செல்ல அதனால முடிகிறது.
ஒளி இருளை, உண்மையுடன் இணங்க வைக்கிறது.
தவறுகளோ ஆறுதல் இன்மையை அதிக அளவில் உண்டாக்குறது;