த. கோவேந்தன் 莎莎
தேடுவதும் காண்பதும்
மாணவன் : அறிவு எங்கே உள்ளது?
உண்மை எங்கே?
அமைதி வாங்கே?
நான் துயருற்று இருக்கிறேன், அதற்கு மனிதர்களி னால் எவ்வித ஆறுதலையும் பெற முடிவதில்லை;
நான் வழி தவறிவிட்டேன்; மனிதர்களின் அறிவுரை களினால் என் மனத்திற்கு உறுதியைப்பெற முடியவில்லை;
ஆம்! என்ணில்கூட நான் உண்மையைக் காணவில்லை
எனது ஐயங்களுக்கும் துன்பங்களுக்கும் தீர்வு இல்லை.
என் நெஞ்சத்தின் இறுமாப்புடன் நான் போராடிக் கொண்டிருந்தேன்;
எனது கருத்துகளினால் மனிதர்கள் மனநிறைவைப் பெற்றுள்ளனர்.
நல்லவற்றிற்குப் பதிலாக தீயவற்றைத் தவறுதலாகக் கொண்டு விட்டேன்; -
அறிவிற்குப் மாற்றாக அறியாமையை அடைந்து விட்டேன்;
அதனால், இப்போது நான் தனிமையில் உள்ளேன், என் குரலைக் கேட்பதற்கு யாருமில்லை;
தான்் அழுதாலும் என் குரலைக் கேட்டு வர யாருமே இல்லை.
ஆசர்ன்: அப்படியில்லை, உன்னுடன் நான் இருக் கிறேன். உன் குரலைக் கேட்கிறேன். உன்னைக் காப் பாற்ற உறுதி அளிக்கிறேன்.