பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 வெற்றி மேல் வெற்றி பெற...

அதுவே, அப்படி உண்டாக்கியதைக் கொந்தளிப்புடன் பற்றிக் கொள்வது;

அதன் பின்னர், ஆசையுற்ற பொருளிலிருந்து பிரிந்து போதல் நிகழ்வது,

அதுவே துயர்படுதலும் துன்பமும். ஆசையிலிருந்து எழுகிறது. தற்பெருமை அல்லது தன்னலம்,

அவ்வாறாகவே தன்னைப் பற்றிய ஒரு பொய்த் தோற் நம் உருவாக்குகிறது;

தான்் என்ற மாயையில் உள்ளது உலக துன் பத்தின் தீய கனவு.

அதனால் பொது அறமுறைச் சட்டத்தின் செயற்பாட்டி னால் மாந்தன் துன்புறுகிறான்;

பொது அறமுறைச் சட்டத்தினால் துன்புறுவதிலிருந்தும் அவனால் தப்பிக்க முடிகிறது.

ஆசை நீக்கப்பட்டதும், மனத்தின் அவலம் மிக்க பசி தீர்க்கப்படுகின்றது.

பொருள்களைப் பறறிக் கொள்கின்ற நெருப்புக் காய்ச்சல் தணிக்கப்படுகின்றது;

அதனால், பிரிவும் துன்பமும் இல்லாமல் போகிறது; அப்போது, எல்லாவற்றிலும் ஒற்றுமை உண்டாகிறது, அதுவே நிறைவு, பேரின்பம், அமைதி.

ஆசையின்மையில் இருந்து பணிவும் அன்பும் உண்டா கின்றன;

நிலையானதும் வேறானதுமான தனித்தன்மையின் பொய்த் தோற்றம் அழிக்கப்படுகிறது,