பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாாத தேவியின் பாத தரிசனம் உயர்ந்தவர் ? குடிலில் வசிப்பவரா அல்லது மாளி 'கையில் வசிப்பவரா? பன்றி தன் மனைவி மக்க ளு,ன் யாதொரு கஷ்டமும் இல்லாமல் சந்தோஷ மாகப் படுக்கலாம், புரளலாம். தாங்கலாம். ஆனல் -அந்தப் பன்றியின் தலைவனே? அவன் மனைவி மக்களோ ? இந்தக் காட்சி ஒரு நாளும் என் இதயத்தை விட்டு அகன்றதில்லை. ஆனல் இதைக் காண அடிக் கடி எனக்கு வாய்ப்பதில்லை. ஒருநாள் சமீபத்தில் நானும் என் மனைவியும் சில நண்பர்களுடன் காரைக்குடி பெண் பாடசாலை அருகிலுள்ள தெரு வில் ஒரு காரில் போய்க்கொண்டிருந்தோம். அப் பொழுது மறுபடியும் மானமதுரையில் அன்று கண்ட சுந்தரக் காட்சி ! அதைக் கண்டதும் என் மனைவி, ஐயோ இவர் கள் யார் ? இவர்களுக்கு விமோசனம் எப்பொழுது ? இதுவும் இறைவன் திருவிளையாடலோ ? என்று துன்பக் குரலில் கேட்டாள். எங்களுடன் இருந்த ஒரு பெண்மணி, இவர்களுக்கும் ஆண்டவன் அனு தினமும் படிஅளக்கவே செய்வான் ' என்று மனத் தில் எவ்விதச் சஞ்சலமுமின்றிக் கூறினுள். ஆல்ை, இதைக் கேட்டு என் மனைவியின் மனம் சமாதானம் அடையவில்லை. இங்கே என்ன காண்கிருய் ? அன்னேயின் பாதம் இவர்களுக்கு விமோசனமா ? பாாத தேசம் 103