பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

எங்கே முத்துசாமி என்ற கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல் பட்டபாடு சுந்தரம் மட்டுமே அறிவார்.

குணசேகர் தலையில் ஒரு கோடி இடிவந்து விழுந்ததுபோல இருந்தது. முத்துசாமியின் தலை மறைவு அவர் மன அமைதியையே அழித்து விட்டது.

சுறுசுறுப்புடன் திரித்த அவர், சோர்ந்து விட்டார், காதல் கிறுக்கேறி, அவன் ஒரு பெண்ணுடன் ஓடிவிட்டான் என்ற சேதி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தனது முனைப்பான இலட்சியத்தின் முதல் அடியாக இது இருக்குமோ! தனது நோக்கம் நொறுங்கிப் போய் விடுமே பிறர் கேலிக்கும் பழிப்புக்கும் ஆளாகிப் போவோமோ?

இப்படி நினைக்க நினைக்க அவர் யாரிடமும் பேசக்கூட விரும்பாத நிலைக்கு ஆட்பட்டார்.

இன்பநான் எவ்வளவோ சமாதானம் கூறிப்பார்த்தார். நெஞ்சு வலிக்கிறது என்ற குணசேகர் கூறும் போதெல்லாம் 'டேக்கிட் ஈசி' என்று இன்பநாதன் சொல்வார்.

சரி என்று சொன்னாலும் சமாதானம் இல்லாத நெஞ்சினராக குணசேகர் நடமாடினார். நம்பும்படி நடந்து கொண்டார்.

சுந்தரம் தன் பயிற்சி வேலையை இழந்தார். அவர் செய்து வந்த 'பேச்சும்' பலப்பல வேலைகளும்தான் அவருக்கு இப்பொழுது உதவின.

வடிவேலு வந்து வந்து போனார். குணசேகரிடம் பலப்பட முத்துசாமியைத் திட்டினார்.

"நல்ல பையன்னு நிக்னச்சேனுங்க. இப்படி நாதாரித்தனமா நடந்துக்குவான்னு நான் நினைக்கவே இல்லிங்க