பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138



இன்பநாதன் வந்த வேகத்தைப் பார்த்த குணசேகரின் மனைவி, அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்பது போல ஜாடையாகச் சொல்லிவிட்டு, உள்ளே போய்விட்டார்.

இன்பநாதனுக்கோ தர்ம சங்கடமாகப் போய்விட்டது, குணசேகரின் மனைவியின் எச்சரிக்கையை மீறவும் முடியவில்லை. தான் கொண்டுவந்த சேதியை அவரால் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.

உட்கார்ந்திருந்த அவரால் அமைதியாக இருக்க முடிய வில்லை, எழுந்து இப்படியும் அப்படியுமாக நடக்க ஆரம்பித்தார். கைகளைப் பிசைந்து கொண்டார். இருப்பு கொள்ளாமல் தவித்த அவரது நிலை, பார்க்கப் பரிதாபமாக இருந்தது.