146
இன்பநாதன் திரும்பிப்பார்த்தார். குணசேகர் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து , வீட்டிற்குள் ஒடி குணசேகரின் மனைவியை அழைத்துக் கொண்டு வந்தார்.
என்னங்க...ஒங்களுக்கு நல்லா போயிடுச்சுங்க என்று மற்றவர்கள் இருப்பதையும் பொருட்படுத்தாமல் குணசேகரின் மனைவி அவரை கட்டித் தழுவிக் கொண்டார்.
நேசலிங்கம் எழுந்து நின்று கொண்டான். இப்பொழுது இன்பநாதனின் அன்புப் பிடியிலே கிடந்தான் நேசலிங்கம்,
தங்கப்பதக்கத்தை எடுத்து தன் மனைவியிடம் நீட்டினார் குணசேகர்.
தன் கனவன் காட்டிய பதக்கம் தங்கப் பதக்கமாக அவளுக்கு தெரியவில்லை. தனக்கு வாழ்வு தருவதற்காக வந்த தெய்வ பரிசாக, தேனாமிர்த கலசம் போலவே அது தெரிந்தது. அப்படியே வாங்கி மார்புற வைத்துத் தழுவிக் கொண்டாள்.
மன துக்குள்ளே அந்த நேசலிங்கத்தை மனமார வாழ்த்துதினாள். மண்டியிட்டு வனங்கினாள் மீண்டும் புனர் ஜென்மம் அளித்த ஒரு புத்திரனாக எண்ணி மகிழ்ந்தாள்.
தனக்கும் ஒரு குழந்தை இதுவரை இல்லையே! இவனையே தன் குழந்தையாக தத்தெடுத்துக் கொண்டால்,வீட்டிலும் இன்பமயமாக இருக்குமே என்று ஒரு நினைவு எழுந்ததும், உடல் சிலிர்த்துப் போனாள். அந்த ஆசையைக் தன் கணவனிடம் மெதுவாகக் கூறினாள்.
நேசலிங்கம் இனிமே எங்கேயும் போக வேணாம். நம்ம மகன் வீட்டிலயே இருக்கட்டும். என்னங்க சரிதானே என்றாள் குணசேகரின் மனைவி.