14. ஆரம்பத்தின் அமர்க்களம்
குணசேகர் காரிலிருந்து இறங்கினர். இன்பநாதனும்கூடவேந் திருந்தார். மிகவும் வியப்புடன் கல்லூரியின் இடங்களைப் பார்த்துக் கொண்டே ந்தனர் இருவரும்.
நான் இந்தக் கல்லூரியில் தான் படிச்சேன். விகள யாட்டுக்குன்னு உருவான மாதிரியே இந்த இட அமைப்பு இருக்கு பார்த்தீங்களா ! எல்லா செளகரியமும் இங்கே இருக்குது ஆளு, எதிர்ப்பார்த்த மாதிரிதான் எதுவும் இல் லேங்குற குறை இங்கே இருக்குதுங்கிற ஒரு அபிப்ராயம், எல்லோருடைய மனசுலயும் இருக்குது : இன்பநாதன் எதை எதையோ மனதில் வைத்துக் கொண்டு பேசினார்.
பரந்த விரிந்த இடப்பரப்பில், பசுமையான புல்தரைகள். நிழல் தரும் மரங்கள், கண்ணுக்கெட்டிய தூரம் ஆங்காங்கே விகளயாட்டு மைதானங்கள். இளமை நிரம்பியவர்களின் எடுப்பான நடைகள். மிடுக்கான பார்வைகள், கலகலவென சிரிப்புக்கள். கத்திக் கத்தி பேசும் பேச்சுக்கள், கண் கவரும் காட்சிகளாக இருந்தன. கல்லூரியே இளமையாகத் தான் தோற்றமளித்தது.