தம்மை மறந்த அடியவர்-அமைச்சர் 16懿 எனப் பலவகையில் உவமை உருவகங்களால் விளக்கி அவற்றி. லிருந்தெல்லாம் தம்மைக் காத்த தனித் தன்மையைப் பாராட்டுகின்ருர். இவ்வாறு இவர் உவமைகள் எண்ணி: எண்ணி மகிழற்பாலன. உள்ளன பல; காட்டியன மிகச் சிலவே. இப்படியே மணிவாசகர் பல பழமொழிகளையும். எடுத். தாளுகின்ருர். ஓரிரு காட்டுக்கள் போதும். - பொறுப்பரன் றேபெரி யோர்சிறு நாய்கள்தம் பொய்யினையே (6-6) மெள்ள வேமொய்க்கும் நெய்குடங் தன்னை எறும்பு (6-24). எறும்பிடை காங்கூழ் (6-25). பலாப் பழத்து ஈ (6-46). என்பன சில. இவ்வாறு இலக்கியம் பாடும் பல புலவர்கள் போன்று மணிவாசகர் தம் திருவாசகத்தை இலக்கியப் பூங்காவாக அமைக்கின்ருர் என்பதனேடு அமையாது, இவை அவரைத் "தம்மை மறந்தார்’ என்பதை எப்படிக் காட்டுகின்றன என் பதையே நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். மணிமொழி: யார் திருவாசகமே யன்றித் திருக்கோவையாரையும் பாடினர் என்பர். அக்கோவையாரைப் பற்றிப் பின் எழுந்த ஒரு பாடல் அதன் சிறப்பை நன்கு உலகம் உணரச் செய்கிறது. அதே பாடலின் கருத்துத் திருவாசகத்துக்கும் பொருந்துவ தாகும். - ஆரணங் காணென்பர் அந்தணர் யோகியர் ஆகமத்தின் காரணங் காணென்பர் காமுகர் காமகன் நூலதென்பர் ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர் சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே என்பது கோவையாருக்குரிய பாயிரம். இதே கருத்துத் திருவாசகத்தில் பெண்கள் கலந்து பாடுவது போன்று.
பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/101
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை