பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

வள்ளியம்மாள் கல்வி அறம்



ஒரு கால் நூற்றாண்டில் — சிறிய அளவில் இக்கல்வி நிறுவனத்தைத் தொடங்கி, வெள்ளிவிழாக் கொண்டாடும் அளவிற்கு வலிமை வாய்ந்த கருவூலமாக மாற்றிய ஐயா அவர்களுக்கு நன்றி கூறும் விழாவாக இந்த வெள்ளிவிழாவை நான் நினைக்கிறேன். கடந்த 25 ஆண்டுகள் ஐயா அவர்கள் செலுத்திய தளரா உழைப்பும், முயற்சியும் இதன் மூலம் நன்கு புலப்படுகிறது. இப்பொழுது இந்நிறுவனம் அறுகுபோல் வேரோடி ஆல்போல் தழைத்து இன்று ஒரு நிலைத்த நிறுவனமாக விளங்குகிறது. எனக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் ஐயா அவர்கள் மீது நான் கொண்ட அன்பையும், விசுவாசத்தையும் காட்ட இவ்விழாவிற்கு நான் வந்துள்ளேன். சிறந்த நிலையில் விளங்கும் இந்நிறுவனம் சான்றோர்கள் பாராட்டும் அளவிற்கு உயர்ந்து விளங்க வாழ்த்தி, தமிழ் அன்னையை வாழவைக்கும் ஆசானை வணங்கி விடை பெறுகிறேன். வணக்கம்.