பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

வள்ளியம்மாள் கல்வி அறம்


பெற்றோர்களும் உறுதியாக எண்ணும்படியான சிறந்த தாய்மைப்பற்றின் தகுதியினைப் பெற்று வள்ளியம்மாள் கல்வி நிறுவனம் ஓங்கி நிற்கிறது. தென்சென்னையில் உள்ளவர்கள் கூட இங்கு வந்து பயிலும் படியான சிறந்த கல்வி நிறுவனமாக விளங்குகிறது.

ஐயா அ.மு.ப. அவர்கள், தாம் ஒருவராகவே நின்று ஆசிரியர்களுக்கு ஆக்கம் தந்து, மாணவர்களுக்கு ஊக்கம் தந்து இன்று வெள்ளிவிழா காணச் செய்துள்ளார். அந்த நாளில் எப்படியிருந்தாரோ அதே போலவே இன்றும் இருக்கிறார் என்று அமைச்சர் பெருமகனார் குறிப்பிட்டது போலவே இன்றும் சிறிதும் அலுப்பும், சலிப்பும் இல்லாமல் இக்கல்வி நிறுவனத்திற்காக உழைத்து வருகிறார்.

ஐயா பேராசிரியராக, இதழாசிரியராக, சமயத்துறையில் ஞானாசிரியராக விளங்கி நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாக அமைந்து இம்மாபெரும் கல்வி நிறுவனத்தை நிறுவியுள்ளதைக் காணும் போது என் மனம் நெகிழ்ச்சி அடைகிறது. ஐயா அவர்களே! இந்நிறுவனம் உங்கள் காலத்திலேயே பல்கலைக்கழகமாக வடிவம் பெற வேண்டும் என்று விரும்புகின்றேன். இதை நீங்கள் மிகப் பெரிய செய்தி என்று நினைக்க வேண்டாம். இக்கல்லூரியில், அறிவியல், பொருளியல் மற்றும் மொழியறிவு பற்றிய செய்திகள் அனைத்தும் புகட்டப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் இங்கிருந்த கொடைக்கானல் பல்கலைக்கழகம் மாற்றப்பட்டுள்ளமையால் இந்நிறுவனம் பல்கலைக் கழகமாக வளர்ந்து செழிக்க வாய்ப்புள்ளது.

மாணவர்களே! நீங்கள் எந்த நிறுவனத்தில் பயின்றோம் என்பதை உணர்கின்றபோது நீங்கள் பயின்ற அக் கல்வி