பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

வள்ளியம்மாள் கல்வி அறம்


'ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு'

என்ற வள்ளுவரின் குறளில் அமைந்துள்ள நீடுபுகழ் பெறுதற்குரிய வழிகளைப் பற்றிய அற்புதமான விளக்கங்களைத் தந்துள்ளார்.

‘சுருங்கச் சொல்லல்' என்பது வானொலியில் அமைந்த ஓர் இலக்கணக் கோட்பாடாகும். ஒரு கருத்தை ஐந்தே மணித்துளிகளில் செறிவாகவும் சுருக்கமாகவும் கேட்பவர் மனத்தில் பதியுமாறு எடுத்துரைக்க வேண்டும். அவ்வகையில் 'சான்றோர் வாக்கு' என்ற இந்நூலில் அமைந்துள்ள கருத்துக்கள் அனைத்தும் மிகச் செறிவாக அமைந்துள்ளன.

ஐயா அவர்கள் எந்த ஒரு கருத்தையும் மனத்தில் பதியுமாறு சொல்லுவதில் வல்லவர். 40 ஆண்டுகளுக்கு முன்பு ஐயா அவர்களிடத்தில் ‘நன்னூல்' என்ற இலக்கண நூலை இரண்டு முறை படித்தவன். அவர் கற்றுக்கொடுத்த காண்டிகையுரை — விருத்தியுரை இன்னும் என் மனத்தில் அப்படியே பதிந்துள்ளது. . அத்தகைய சிறந்த ஆற்றல் உடையவர் அவர்.

பொதுவாக ஆனர்ஸ் படிப்பவர்களுக்கு ஆங்கிலம் படிப்பதில் சற்று ஆர்வம் குறைவாக இருக்கும். அதற்கு நானும் விதிவிலக்கு அல்லன். ஆனால் எனக்கு ஆர்வத்தையும், முழு ஊக்கத்தையும் ஏற்படுத்தியவர் ஐயா அவர்களே ஆவார். அத்தகைய சிறந்த ஆசான்' எண்ணற்ற நூல்களை இயற்றியுள்ளார். அவருடைய மாணவனாகிய நான் இன்று அவர் எழுதிய ' சான்றோர் வாக்கு' என்ற நூலை வெளியீடு செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்நூலில் அமைந்துள்ள 'பயனில சொல்லாமை' என்ற கட்டுரையைப் படிக்கும் போது 'Practical way of life