பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

வள்ளியம்மாள் கல்வி அறம்



அண்ணா நகரில் பெண்களுக்காகக் கல்லூரியே இல்லை என்ற குறையை நிவர்த்தி செய்யும் வகையில் திரு. அ மு.ப. அவர்கள் இச் சீரிய கல்லூரியைத் தோற்றுவித்து நடத்தி வருகின்றார். அவருடைய கல்விக் கூடங்களில் என்னைக் கவர்ந்தது மாணவ மாணவியரிடையே காணப்படும் ஒழுக்கம்.

இந்த வெள்ளிவிழாக் கூட்டத்தில் என்னையும் அழைத்து இளஞ்சிறார்களுக்குப் பரிசுகள் வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே, இந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்புப் பெற்றமைக்கு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன். தன் தாயின் பெயரால் பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் நடைபெறுகின்ற இக்கல்லூரி சிறந்த கல்விப்பணியைச் செய்து வருகிறது. இந்த நிறுவனம் மேன்மேலும் வளரவேண்டும். அதற்குப் பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மாணவர்களாகிய உங்களிடம் நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால், உங்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பரிசு பெற்ற மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நிறுவனர் நீண்ட ஆயுளோடு கல்விப் பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று வேண்டி, நன்றி கூறி விடைபெறுகின்றேன்.

நன்றி, வணக்கம்.