இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முருகுசுந்தரம் 32
கவந்தன் கால்களாக
நெடிதுயர்ந்த மரச்சந்தில்
அவள்-
மாட்டிக் கொள்ள
வெள்ளைக் களிறு
அவள்மீது
வேகமாகப் பாய்ந்து
பின்னால் நெருக்கியது.
அவஸ்தை தாளாமல்
அகலிகைப்பிடி
அலறியது.
அருகில் படுத்திருந்த கெளதமன்
அவளைத் தட்டி யெழுப்ப
அச்சத்தோடு
அவன்மீது
அப்பிக் கொண்டாள்.
‘என்ன?'-
என்றான் கெளதமன்.
'யானை!
வெள்...ளானை!'
என்று
குழறினாள் அகலிகை
'எங்கே'? -
என்றான் அவன்.
'பின்னால்!'
என்றாள் இவள்.
குழந்தையாக அணைத்துத்