இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முருகுசுந்தரம் 34
ஒருநாள்-
மாலை மயங்கும் நேரம்.
இணை சேர்ந்த
இரண்டு தும்பிகள்
கை கோத்தபடி
'பாலே' நடனமாடுவதுபோல்
எதிரில் பறக்க,
அந்த வேடிக்கையைக்
கண் கொட்டாமல்
கண்டு களித்த அகலிகை,
உள்ளத்தில்
பிள்ளைப்பூச்சி ஊர
உடம்பைக்
குப்புறக் கிடத்திப்
படுத்துறங்குவதாகப்
பாவனை செய்தாள்.
இமைகள் மூடிய
பூரண விழிப்பு!
உள்ளத்தையும் உடலையும்
சுட்டெரிக்கும் யானைத் தீ.
யாரோ
மேலே விழுந்து
தட்டியெழுப்புவது போல்
வெளியில்
கொண்டைச் சேவலின் கூவல்.
கெளதமன் எழுந்து
காலைக் கடன் முடிக்கக்
கங்கைக் கரைக்குப்
புறப்பட்டான்.
ஆனால்...