இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
55 ※ வெள்ளை யானை
கண்வலையில் சிக்கி
வசியப்பட்டு
நாங்கள் வசமிழக்கிறோம்.
சட்டையை உரிப்பது
உன் பிறவிக் குணம்
என்பதை அறியாத நாங்கள்,
நீ அடிக்கடி
ஆன்மீக நெருப்பில்
குளித்துவிட்டு
அருட்பிழம்பாய்க்
காட்சி தருவதாக
அதிசயித்து நிற்கிறோம்.
காந்தியை நாங்கள்
கடவுளாக எண்ணி
வழிபட்டோம்.
நீ -
கோட்சேப் பற்களால் கொத்தி
அவர் கனவுச் சொர்க்கத்தையும்
குப்புறத் தள்ளி
அவரையும் அதில் புதைத்துவிட்டாய்
நேருவின்
சமதருமப் பெட்டியைக் கூடப்
பண்டோரா பெட்டியாக
மாற்றியது நீதானே?
நீ-
காளிங்க மடுவை மட்டுமா
நச்சுப் படுத்தினாய்?
கங்கையை
கிருஷ்ணாவை