பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237 தன்னிடம் வந்த மகமதியர்களுக்கு இவைகளில் ஒன்றை யும் அவர் கொடுத்ததில்லை. அவரவர் மதாச்சாரத்தின் படியே பஜனை செய்யச் சொல்லித்தான் உபதேசித்திருக் கிறார். பாபாவை பூரீமத் நாராயணன் என்று இன்று பலரும் பூஜிக்கிறார்கள். ஆம். அவரை மகம்மதியராக நினைத்தவர்களுக்கு மகம்மதியராகவும், இந்துவாக நினைத்த வர்களுக்கு அவர் இந்துவாகவும் இருந்திருக்கிறார். முகம்மதியர்களுக்கு குரானை விளக்கியிருக்கிறார். இந்துக்களுக்கு அவர்கள் சாஸ்திரத்தை விளக்கியிருக் கிறார். பலருக்கு அவர் கண் கண்ட தெய்வமாகவே காட்சி அளித்திருக்கிறார். அவர்களது உள்ளத்தில் அருளாட்சி புரிந்திருக்கிறார். இப்படி ஒரு மகான் இந்த நூற்றாண்டில்.