பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 Í முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுக்ஜோதி அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டோமே, என்று பாடினார், ஒருதரம். பின்னரும் மயங்கி இறைவன் எம்பிரான் எல்லையில்லாததன் இணைமலர்க் கழல் காட்டி அறிவுதந்து எனை ஆண்டு கொண்டருளிய அற்புதம் அறியேனே. என்றும் பாடினார். ஆம். நானும் அற்புத மலையில் உள்ள அதிசயமான கலைக் கோயில்களைக் கண்டபின், இதன் அற்புதத்தை சொல்ல அறியாவிட்டாலும், அதிசயம் கண்டோமே, அதிசயம் கண்டோமே என்று கூத்தாடி, மகிழலாம் அல்லவா? அந்த மகிழ்ச்சியையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே ஒரு சில பாகங்களைப் படம் பிடித்து உங்களுக்கு காட்டுவதில் திருப்தி அடைகிறேன். பெருமைப் படுகிறேன்.