பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

ஒன்றும் இல்லை. புங்கம் செடிகள் நிறைந்த ஊர் இது, கரிஞ்சாரண்யம் என்றே ஒரு பெயர் இவ்வூருக்கு. இந்த ஊரின் நிலவளம் ஏன் செழிப்பாயிருக்கிறது என்று எனக்கு இப்போது விளங்குகிறது. பசுந்தழை உரத்தில் புங்கன் தழைக்குமேல் நல்ல உரம் கிடையாதே. புங்கமரமே இங்கு தல விருட்சம். உரம் இருந்தது, உழத் தெரிந்தது. ஆனால் கிடைத்த நிலங்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியவில்லையே இந்தச் சிவலோகநாதருக்கு என்பதே நமது வருத்தம்.