இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களோ வேறு ஒரு காரணமும் கூறுகிறார்கள். அவர்கள் கூறும் காரணம் இதுதான்:
“தில்லைப்பதி உடையான்
- சிற்றம்பலந் தன்னில்
அல்லும் பகலும் நின்று
- ஆடுகின்றான் எல்லைக்கண்
அண்ணா மலை மன்
- அமைத்த கலைக்கழகம்
கண்ணாரக் கண்டு களித்து.”
இன்னும் அதிகமாக நான் ஏதாவது சொல்ல வேண்டுமா என்ன?