பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களோ வேறு ஒரு காரணமும் கூறுகிறார்கள். அவர்கள் கூறும் காரணம் இதுதான்:

“தில்லைப்பதி உடையான்

சிற்றம்பலந் தன்னில்

அல்லும் பகலும் நின்று

ஆடுகின்றான் எல்லைக்கண்

அண்ணா மலை மன்

அமைத்த கலைக்கழகம்

கண்ணாரக் கண்டு களித்து.”

இன்னும் அதிகமாக நான் ஏதாவது சொல்ல வேண்டுமா என்ன?