இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
125
நீலமே! காரின் முகிலே!
நெடுங் கடலின்
கோலமே! அத்திகிரிக்
கோமானே! - மூலமென
மாத்தாமரை மடுவில்
மால்யானை ஓலமிடக்
காத்தாய்! கடைபோகக் கா!
என்று நாமும் கூப்பிடலாம் - பெருந்தேவனாரோடு சேர்ந்து. கூப்பிட்டால் அவனும் கருடன் மேல் ஏறிக் கொண்டு பறந்தே வருவான்.