பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

149

இந்தப் பூசலார் நெடிது நாள் நினைத்துச் செய்த இந்த மனக் கோயிலின் ஞாபகார்த்தமாகப் பின் வந்தவர்கள் ஒரு கோயில்

பக்த வத்சலக் கோயில்

கட்டிபிருக்கிறார்கள். அந்தத் திரு நின்ற ஊரிலே. சென்னை - அரக்கோணம் இருப்புப்பாதையில், திண்ணனூர் என்று ஒரு ரயில்வே ஸ்டேஷன். அங்கு இறங்கித் தெற்கு நோக்கிச் சிறிது தூரம் நடந்தால் (ஆம், நடக்கத்தான் வேண்டும் - வண்டி எல்லாம் ஸ்டேஷனில் எளிதில் கிடைக்காது) பெரிய கோபுரத்தோடு கூடிய கோயில் ஒன்றில் இருக்கும் பக்தவத்சலர் வழி மறிப்பார்.

நமக்குத்தான் சைவ வைணவ பேதமே கிடையாதே. ஆதலால் வழிமறிக்கும் பக்தவத்சலரையே தரிசிக்கலாம், முதலில். இவரையே நின்றவூர் நித்திலம் என்று மங்கை மன்னன் பாடிப் பரவி மகிழ்ந்திருக்கிறான். இந்தப் பக்தவத்சலனையே பத்தராவிப் பெருமாள் என்று அழகாக அழைப்பார்கள்.

இத்துடன் அங்குக் கோயில் கொண்டிருக்கும் தாயாரை ஸ்ரீமத்ஸவித்ரீ நாயகி என்று வடமொழியில் நீட்டி முழக்கிக் கூறினால் நிரம்பவும் அருமையாக என்னைப் பெற்ற தாயார் என்றே அழைப்பார்கள், நல்ல தமிழில் அன்பர்கள்.