பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

வேங்கடம் முதல் குமரி வரை


திடீரென்று ஒர் அதிசயம் நிகழ்கிறது அங்கே கூனிக் குறுகிக் கோலூன்றி நடந்தவன், கூன் நிமிர்ந்து ஓடவே தொடங்கி விடுகிறான். குருடன் கண்கள் திறந்து விடுகின்றன. அவன் கண்கள் ஒளி பெற்று நிமிர்ந்து வளைந்திருக்கும் கொம்பொன்றில் தொங்கிக் கொண்டிருக்கும் தேன் கூட்டைப் பார்த்து, ‘அதோ தேன், அதோ தேன்!’ என்று மற்றவர்களுக்குக் காட்டுகிறான்.

அதுவரை நொண்டியாய் முடமாய்த்தட்டுத் தடுமாறி மலை ஏறிய முடவனோ, குருடன் காட்டிய தேன் கூட்டை எடுக்க, மரத்தின் மேலேயே ஏற ஆரம்பித்து விடுகிறான். அவ்வளவுதான். அதுவரை வாய் பேசாது ஊமையாய்ப் பக்கத்தில் சென்றவனோ, ‘எடுக்கும் தேனில் எனக்குக் கொஞ்சம்!’ என்றே வாய்விட்டுக் கேட்கிறான்.

இப்படியே கூணன், குருடன், முடவன், ஊமையாக இருந்த நால்வரும் தங்கள் தங்கள் குறை நீங்கியவர்களாய் ஓடுகிறார்கள், மலைமேல் நிற்கும் மாதவனின் திருவடிகளில் சென்று வீழ்ந்து வணங்கி எழுவதற்கு.

அத்தனையையும் பார்த்துக் கொண்டிருக்கிறார், ஒரு கவிஞர். அவரும் மலை ஏறுகிறவர்களில் ஒருவர்தான். அவர் உள்ளத்திலும் ஏதோ குறை. அதற்குப் பிரார்த்தனை செய்து கொண்டே ஏறுகிறார் மலை மேலே. அவருக்கு அந்த நிகழ்ச்சியை, அந்த அற்புதத்தைக் கண்டு ஒரே வியப்பு. வியப்பை விட மலை மேல் இருக்கும் மாதவனிடத்திலேயே ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையிலே பிறக்கிறது, ஒரு பாட்டு. பாட்டு இதுதான்:

கூன் கொண்டு சென்றவன்கூன்நிமிர்ந்து ஓட,
குருடன் கொம்பில்
தேன் என்று காட்ட, முடவன் அத்தேனை
எடுக்க, அயல்