பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/198

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

வேங்கடம் முதல் குமரி வரை

இன்று அங்குள்ள கோயிலும் குளமும் முந்நூறு வருஷங்களுக்குள் உருவானவைதான். என்றாலும் அந்த இடத்தில் ஒரு பழைய முருகன் கோயில் இருந்திருக்க வேணும். பல்லவ மன்னர்கள் காலத்திலேயே இந்தக் கோயில் எழுந்ததாக வரலாறு. பதின்மூன்றாவது நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்ட கல்வெட்டில், இவ்வூர் தொண்டை நாட்டில் ஆமூர் கோட்டத்தில் உள்ள ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்று குறித்திருக்கிறது.

விக்கிரம சோழன் ஏற்படுத்திய நிபந்தங்களையும், விஜய கண்டதேவர் நந்தா விளக்குக்காகப் பொன் கொடுத்ததையும் அறிவிக்கும் கல்வெட்டுகள் எல்லாம் இங்குள்ள தெய்வயானையார் கோயில் சுவர்களில் சிதைந்து காணப்படுகின்றன. இவைகளே இக்கோயில் புராதனமானது என்பதற்குச் சான்றுகள்.

இந்த ஊருக்கு அந்த நாளிலே சமரபுரி என்ற பெயரும் இருந்திருக்கிறது. இந்தக் கோயிலை விட, இங்குள்ள முருகனைப் பற்றிச் சிதம்பர சுவாமிகள் பாடிய 'திருப்போரூர் சந்நிதி முறை' என்ற பிரபந்தம் சிறந்த இலக்கியப் பிரசித்தி உடையது. இந்தக் கோயில் திருப்பணி பண்ணியவரும் அவரே.

மதுரையில் சங்கப்புலவர் மரபிலே தோன்றியவர் சிதம்பர சுவாமிகள். இளமையிலேயே சிவானுபூதிச் செல்வராக வளர்ந்திருக்கிறார். விருத்தாசலத்திலே இருந்த குமர தேவரை அடுத்து, அவரைக் குருவாகப் பெற்றிருக்கிறார். குமரதேவரோ, பேரூர் சாந்தலிங்க சுவாமிகளின் சிஷ்யர். இப்படிச் சாந்தலிங்கரது அருளும், குமரதேவரது ஆசியும் பெற்று விருத்தாசலத்திலே சமாதி நிலையிலே இருந்தபோது. வேலனுடைய மயில் ஆடும் காட்சியைக் கண்டிருக்கிறார்.

குருதாதரது கட்டளைப்படியே சமரபுரிக்கு வந்து ஒரு பனை மரத்தடியிலே புதைந்து கிடந்த முருகனையும்