பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

கானக்கனியாக வளர்ந்து
ஞானக் குறமாதை மணந்த

முருகனை இத்தலத்திலே வணங்குவதில் ஒரு தனி விசேஷம்.

தெய்வ மகளாகிய தேவசேனையைப் பரிசாகக் கொண்டு வந்து கொடுக்கிறான், தேவேந்திரன். ஆனால் தமிழ் மகளாகிய வள்ளியைத் தேடி ஓடி வந்து காதல் புரிந்து மணக்கிறான், குமரன். இது தமிழ்க் கடவுளான முருகன் தமிழ் மக்களிடத்து வைத்துள்ள அளப்பரிய அன்பினைத் தெளிவாக்குகிறது அல்லவா?

ஆதலால்தான் தமிழ் வருஷப் பிறப்பன்று இத்தலத்தில் திருப்படித் திருவிழா ஏற்பாடு செய்திருக்கிறார்கள், அடுத்த திருப்படித் திருவிழா நடக்கும் போது வள்ளிமலை சென்று விழாவில் சேர்ந்து வணங்கித் திரும்புங்கள் - வசதியுள்ளவர்கள் எல்லாம்.