பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

திரு.S.மகராஜன் அவர்கள். கொஞ்சம் அளவிற்கு மேலேயே புகழ்ந்திருக்கிறார்களோ என்று அஞ்சுகிறேன். ஆனால் அணை கட்டித் தடுக்க முடியாத அன்பல்லவா அவர்களை இப்படி எல்லாம் எழுதத் துண்டியிருக்கிறது. அவர்கள் அன்பிற்குத் தலை வணங்குகிறேன்.

நான் நல்ல கலை வாழ்வில் திளைத்த குடும்பத்தில் பிறந்தவன். என் பாட்டனார் திருப்புகழ்ச் சாமி என்னும் முருகதாச சுவாமிகளின் சிஷ்யர். என் தந்தையார் நல்ல சித்ரீகர். பரம்பரைச் சொத்தாகக் கிடைத்த இக்கலை ஆர்வம் நாளும் வளர வகை செய்தவர்கள் அமரர் ரஸிகமணி டி.கே.சி. அவர்கள். அவர்களுக்கு இந்நூலை உரிமையாக்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

புத்தகம் வெளிவருவதில் ஆர்வம் காட்டிய அன்பர்கள், புத்தகத்தை விரைவில் அச்சடித்துக் கொடுத்த பிரசுரகர்த்தர்கள், எல்லோருக்கும் என் அன்பும் நன்றியும். இனிப் புத்தகத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியது தமிழ் உலகம்.


‘சித்ரகூடம்’ தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

திருநெல்வேலி-5 1.4.60