பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

வேங்கடம் முதல் குமரி வரை

அன்று இந்தப் பிராகாரத்தில் படிந்த இரத்தக் கறையை, முழுக்க முழுக்க ஜலத்துக்குள்ளேயே இருந்த ஜலகண்டேச்வரராலும் கழுவித் துடைக்க முடியவில்லை. அந்த அவமானம் தாங்க மாட்டாமலோ என்னவோ, அன்று கோயிலை விட்டு ஓடியவர்தான் இன்னும் திரும்பவில்லை. வேலூருக்குப் பக்கத்திலே உள்ள சின்னஞ் சிறிய ஊரான சத்துவாச் சேரியிலே, 'கோயிலுக்கே வர மாட்டேன்' என்று சத்தியாக்கிரஹமே செய்து கொண்டிருக்கிறார் இன்னும்.

இதுவரை சொன்னதில் எவ்வளவு கர்ண பரம்பரை, எவ்வளவு சரித்திர உண்மை என்று அறுதி இட்டு உரைக்க முடியாது. கோவில், கோட்டைக்குள் இருப்பது நிதரிசனம். கோயிலுக்குள் மூர்த்தி இல்லை என்பதும் கண்கூடு. யார் காலத்தில் யாரால் வெளியேற்றப்பட்டார் என்பதற்குப் போதிய சரித்திரச்சான்றுகள்கிடைக்கவில்லை. சுமார் இருநூறு வருஷங்களாக, ஆங்கிலேயர் ஆட்சிநடந்த காலம் முழுவதும், அதற்கு முன்னும் பின்னும் கோயிலுக்குள் மூர்த்தி இருக்கவில்லை என்பது மட்டும் நிச்சயிக்க முடிகிறது.

இந்த மூர்த்தியைத் திரும்பவும் கோயிலுக்குள் எழுந்தருளப் பண்ண எவ்வளவோ முயற்சிகள். வேலூரில் உத்தியோகம் ஏற்றிருந்த பொழுது என்னால் இயன்றதை எல்லாம் நானும் செய்தேன். திரு. ராதாகிருஷ்ணன், திரு. ஹுமாயூன் கபீர் முதலியவர்களை எல்லாம் அழைத்தேன். கோயிலைக் காட்டினேன். ஜலகண்டேச்வரருக்கு வக்காலத்து வாங்கிப் பேசினேன். பலன்தான் இல்லை. நாளும் கிழமையும் வர வேண்டாமா? ஜலகண்டேச்வரரே மனம் வைக்க வேண்டாமா?

கண்டத்தில் விடமும், கையினில்
மழுவும், காதினில்
துலங்கும் நாக