பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

113

வியர்வை அரும்புவது. இது இன்றும் நடக்கும் கண்கொள்ளாக் காட்சியாகும். இப்படிக் குமரனுக்கு வேல் கொடுத்த வேல் நெடுங்கண்ணியையும் தரிசித்து விட்டு, கோயில் பிரகாரத்தை ஒரு சுற்றுச் சுற்றலாம். தென்பக்கத்தில் இரும்புக் கதவுகள் போட்டுப் பதனப்படுத்தி வைத்திருக்கும் அறைகளில் தங்க மயில், தங்க ஆட்டுக்கடா, தங்கக் குதிரை வாகனங்கள் எல்லாம் இருக்கும். இவற்றையெல்லாம் பார்க்க அதிகாரியின் அனுமதி வேண்டும். ஆதலால் விரைவாகவே பிரகாரத்தைச் சுற்றிக் காசி விசுவநாதர், கார்த்திகை விநாயகர், ஆறுமுகன் முலியோரைத் தரிசித்து விடலாம்.

இத்தனையும் பார்த்து விட்டாலும் வெளியே வர முடியாது. இந்தக் கோயிலின் வடக்குப் பிரகாரத்தில் இருந்த சிங்கார வேலவர் தம் அம்மானுக்கு இடம் கொடுத்திருக்கிறாரே, அவரைப் பார்க்க வேண்டாமா? அங்கு தனிக் கோயிலில் இருப்பவர் கோல வாமனப் பெருமாள். பெயர் தான் வாமனரே ஒழிய நல்ல நீண்டு வளர்ந்த ஆஜானுபாகு; அவரையும் அவருடைய துணைவி கோமளவல்லித் தாயாரையும் வணங்கலாம். வெளியே மண்டபத்தில் நல்ல சிமெண்டில் ஆதிசேஷனை ஆசனமாகவும் ஸ்ரீதேவி பூ தேவியரைத் துணைவிகளாகவும் கொண்டிருக்கும் வைகுண்ட நாதன் வேறே உருவாகியிருக்கிறான். இவரையுமே கண்டு தரிசித்து விட்டு வெளியே வரலாம். இதன் பின்னும் அவகாசம் இருந்தால் கோவிலுக்கு மேல் புறம் உள்ள பால்குளம், மற்றைய இலக்குமி தீர்த்தம், கயா தீர்த்தம், அம்மா குளம் முதலியவற்றைக் காணலாம்.

இத்தலத்துக்குச் சம்பந்தர் வந்திருக்கிறார். வெண்ணெய்ப் பிரானைப் பாடிப் பாடிப் பரவி இருக்கிறார்.

நீலம் நெய்தல் நிலவி
மலரும் சுனை நீடிய