இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
115
இக்கோயிலில் எட்டுக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகளில் இரண்டு கோல வாமனப் பெருமாளைப் பற்றியும், ஒன்று சிங்கார வேலவனைப் பற்றியும், மற்றவை நவநீதப் பெருமாளைப் பற்றியும் உள்ளவை. ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீர பாண்டியன் கல்வெட்டு பால்வெண்ணெய் நாயனாருக்கு வழிபாட்டுக்குப் பணம் கொடுத்ததைக் கூறுகிறது. பாண்டிய மன்னர் தவிர விஜயநகர நாயக்க மன்னர்களும் நிபந்தங்கள் பல ஏற்படுத்தியிருக் கிறார்கள். மகாராயர், வீரபூபதி அச்சுததேவ மகாராயர் ஏற்படுத்திய நிபந்தங்கள் பல. இவற்றை யெல்லாம் விரிவாய் ஆராய்வதற்கு நேரம் ஏது, நாம் செல்லும் க்ஷேத்திராடன வேகத்தில்?