பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15. மறைக்காடுறை மணாளர்

ந்தாறு வருஷங்களுக்கு முன்பு நான் தஞ்சையில் உத்தியோகம் ஏற்றிருந்தேன். அப்போது ஜில்லா போர்ட் நிர்வாகம் என் கையில் இருந்தது. ஜில்லா போர்டின் நிதி நிலைமை திருப்திகரமாக இல்லை. ஆரம்பப் பள்ளிகளை நடத்துவது மிக்க சிரமமாக இருந்தது. ஆதலால் பஞ்சாயத்து போர்டாராவது அல்லது தனிப்பட்ட பெரிய மனிதர்களாவது, அவரவர் கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியை ஏற்று நடத்த முன்வந்தால் சர்க்கார் அனுமதியுடன் அந்தப் பள்ளிகளை அவர்களது நிர்வாகத்தில் விட்டு விடத் தயாராக இருந்தோம்.

திருப்பனந்தாளில் ஓர் உயர்தர ஆரம்பப் பள்ளியிருந்தது. அந்தப் பள்ளியை அங்குள்ள ஆதீனத் தலைவர் ஏற்று நடத்த விரும்பினார்கள். சர்க்கார் அனுமதி பெற்று அந்தப் பள்ளியை அவர்களது நிர்வாகத்துக்கு மாற்றினோம். அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்த முனைந்த ஆதீனகர்த்தர் அவர்கள் பள்ளியைத் திறந்து வைக்க என்னையே அழைத்தார்கள். ஆம். மார்ச்சு மாதம் முப்பத் தொன்றாம் தேதி ஜில்லா போர்ட் நிர்வாக அதிகாரியாக நான் மூடிய