பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

157

குறி ஒன்றும் இல்லாத
கூத்தன் தன்கூத்தை எனக்கு
அறியும் வண்ணம் அருளியவாறு
ஆர்பெறுவார் அச்சோவே

என்று பாடினார் மாணிக்கவாசகர். நம்மையும் இந்தக் குறி ஒன்றும் இல்லாத கூத்தனது கோயிலுக்கு அழைத்து வந்து, அங்கு இருக்கும் அற்புதங்களையெல்லாம் காண வைத்த இறைவன் திருவருளை வியந்து கொண்டே நாமும் வீடு திரும்பலாம். இனி,

இன்பம் பெருக்கி
இருள் அகற்றி எஞ்ஞான்றும்
துன்பம் தொடர் வறுத்து
சோதியாய் - அன்பு அமைத்து
சீரார் பெருந்துறையான்
தன்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான்
உவந்து

என்று திருவாசகப் பாடலே நமது நித்யப் பிரார்த்தனை யாகவும் இருக்கலாம் தானே.

காளி