பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/184

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

ஆறு கொண்டது பாதி
தூறு கொண்டது பாதி - அதனால்
கொட்டாங்கச்சியிலே நெல்லு
கொடுங்கையிலே வைக்கோல்,

இதற்கு மேலும் அந்த ஊரின் பிரபாவத்தைச் சொல்ல வேணுமா? இந்தச் சிறிய ஊரிலே ஒரு கோயில். கள்ளிக் கோட்டை ஓடு போட்டு முன்கூரை வேய்ந்திருக்கும். அங்கு இருப்பவர் கல்யாண ரங்கநாதர் என்பார்கள். அங்குள்ள ராமனோ மிகமிக அழகு வாய்ந்தவன். அவனைப் பார்க்கவே ஒரு நடை போகலாம் அந்த ஊருக்கு.