பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/193

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

179

நகரின் உள்ளே சென்று ராஜகோபால சுவாமியையும் காணலாம். இதற்கெல்லாம் அவகாசம் இல்லாதவர்கள் கூட அரண்மனைக் கட்டிடங்களுக்குச் சென்று அங்கு அந்த ரகுநாத நாயக்கன் கட்டிய சங்கீத மகாலையும், சரபோஜி மன்னன் அமைத்த சரஸ்வதி மகாலையும், சில வருஷங்களுக்கு முன் உருவான கலைக் கூடத்தையும் காணாது திரும்பக் கூடாது. கலைக்கூடத்தில் தமிழ் நாட்டுச் சிற்ப வடிவங்கள் நூற்றுக்கு மேல் பார்க்கலாம். தமிழரது சிற்பச் செல்வம் எப்படிப்பட்டது என்றும் தெரிந்து கொள்ளலாம்.