பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/242

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

இத்துடன் ஆங்கிலேயரும் பிரஞ்சுக்காரர்களும் தங்கள் ஆதிக்கத்தை இந்தியாவில் நிலைநாட்ட முயன்ற போது நடந்த சண்டையின் நிலைக்களன் இம்மலைக் கோட்டை. சந்தா சாகிபு, முகமதலி கதையெல்லாம் நாம் தாம் படித்திருக்கிறோமே. இவ்வரலாற்றையெல்லாம் ஆராய்பவர்கள் ஆராயட்டும். அதற்கெல்லாம் நமக்கு அவகாசம் ஏது? நாமே நானூறுக்கு மேற்பட்ட படிகள் ஏறி இறங்கி அலுத்து வந்திருக்கிறோம், என்றாலும் அதற்கெல்லாம் தக்க பலனாக, உச்சிப் பிள்ளையார், தாயுமானார், மட்டுவார் குழலி மூவரையும் தரிசித்து விட்டு வந்திருக்கிறோமே, அது போதாதா?