பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/243

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25. கந்தனை அனைய கடம்பந்துறையார்

ர் அரசவை. அங்கே புலவர் பலர் குழுமியிருக்கின்றனர். புலவர்கள் கூடியதால் பாடல், எதிர்ப் பாடல் இடையிடையே ‘சமுத்தி' என்றெல்லாம் நடக்கிறது. சமுத்தி என்றால்தான் தெரியுமே ஒருவர் கடை அடி கொடுக்க, மற்றவர் பாட்டை முடிக்க; ஒருவர் அடியெடுத்துக் கொடுக்க மற்றவர் பாட்டை முடிக்க; ஒருவர் அடியெடுத்துக் கொடுக்க மற்றவர் தொடர்ந்து பாட; ஒருவர் ஒரு கருத்தைச் சொல்ல அந்தக் கருத்தை அமைத்து மற்றவர் பாட என்று அமையும் அல்லவா? அந்த அவையில் ஒரு புலவர் விரும்புகிறார். சூரியன் செல்லும் கதி முழுதும் வரும்படி ஒரு வெண்பாப் பாடவேண்டும் என்று. உடனே பாடுகிறார் ஒரு புலவர்.

குண கடலில் தேன்றி
கோகனப் போதை
மணமுடனே நன்றாய்
மலர்த்தி -வணமாக

வே.மு.கு.வ - 16