இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
239
இம்மூன்று கோயில்களுக்கும் சேர்ந்த பெருந் திருவிழா தைப்பூசம் தான். இம்மூவரைத் தவிர இன்னும் ராஜேந்திரம், பேட்டை வாய்த்தலை, கருப்பத்தூர், முசிரி, வெள்ளூர் கோயிலில் உள்ள மூர்த்திகளும் காவிரியின் தென்கரை வந்து, முகாம் அடித்து ஓர் இரவு முழுவதும் கூத்தடித்துவிட்டுத் திரும்புவர். மலை ஏற இறங்க எல்லாம் இயலாதவர்கள், காலை, மதியம், மாலை என்றெல்லாம் ஓடக்கூடாதவர்கள் எல்லாம் ஒரே இரவிலேயே எல்லோரையும் கண்டு தரிசித்து விரும்பிய பலனைப் பெற்று விடலாம். இந்த ரகசியத்தை நான் சொன்னேன் என்று மட்டும் இந்த மூவரில் எவரிடமும் சொல்லிவிடாதீர்கள்; அவ்வளவுதான்.