பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/263

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27. பாண்டிக் கொடுமுடியார்

ராமனும் அனுமனும் ஒரு நாள் அயோத்திநகரில் இருந்து வெளியூர்களுக்குப் புறப்படுகிறார்கள். போகிற வழியில் ஓர் ஆற்றைக் கடக்க வேண்டியிருக்கிறது. ஆற்றிலோ வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. படகு இல்லாமல் ஆற்றைக் கடத்தல் இயலாது என்று படுகிறது ராமனுக்கு. ஆனால் அனுமனோ 'ராம, ராம்' என்று சொல்லிக்கொண்டு ஆற்றில் இறங்கி விடுகிறான். ஆற்றில் ஓடிய வெள்ளமும் அப்படியே ஸ்தம்பித்து நின்று, ஓர் ஆள் போகக் கூடிய அளவுக்கு வழி அமைத்துக் கொடுக்கிறது. அனுமன் ஆற்றைக் கடக்கிறான் ராம நாமஸ்மரணை செய்து கொண்டே. ராமனும் அவன் பின்னாலேயே இறங்கி நடந்தே ஆற்றைக் கடக்கிறான் அன்று, இப்படி ஒரு கதை, கதை உண்மையாக நடந்திருக்க வேண்டும் என்பதில்லை. ராமனைவிடப் பெரியது ராமநாமம் என்று அழுத்தமாகச் சொல்வதற்குக் கற்பித்ததாகவே இருக்கலாம். ஆம்! ராம நாமம் ராமனைவிட எவ்வளவு சிறந்ததோ அவ்வளவு சிறந்தது, நமசிவாய என்ற பஞ்சாக்ஷர மந்திரம், அந்த மந்திரத்தின் ஆதிகர்த்தாவாகிய சிவபெருமானை விட. அதனால் தான் அந்தப் பஞ்சாக்ஷர மந்திரத்தைச் சைவப் பெருமக்கள் ஓதி ஓதி வழிபடுகிறார்கள்; இகபர