பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/264

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

வேங்கடம் முதல் குமரி வரை

சௌபாக்கியத்தை எல்லாம் பெறுகிறார்கள், 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஒதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது' அந்த நாதன் நாமம் நமச்சிவாயவே என்று ஞானசம்பந்தர் பாடினால், 'கல்தூணைப்பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நல்துணையாவது நமச்சிவாயவே' என்று பாடுகிறார் அப்பர். மணிவாசகரோ, ‘நமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க' என்றே தம் திருவாசகத்தை ஆரம்பிக்கிறார். ஆனால் இவர்கள் எல்லோரையும் தூக்கி அடிக்கிறார் சுந்தரர் நமச்சிவாய பதிகம் பாடுவதிலே, 'இறைவா! உன்னை நான் மறந்தாலும் என் நா நமச்சிவாய என்று சொல்ல மறப்பதில்லையே. அதனால்தானே பிறவாதபேறு எல்லாம் எனக்கு எளிதில் சித்தியாகி விடுகிறது' என்று எக்களிப்போடு பேசுகிறார்.

மற்றுப் பற்று எனக்கு இன்றி
நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்,
பெற்றலும் பிறந்தேன் இனிப்
பிறவாத தன்மை வந்து எய்தினேன்;
கற்றவர் தொழுது ஏத்தும்