பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/269

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

255

நடராஜர்

பார்த்தோம். சுந்தரர் நமச்சிவாயப் பதிகம் பாடுவதற்குத் தெரிந்தெடுத்த தலமே இதுதான் என்றும் தெரிந்தோம். சம்பந்தர் அப்பர் இருவரும் வேறு பாடி இருக்கிறார்கள்.

பெண்ணமர் மேனியினாரும்,
பிறைபுல்கு செஞ்சடையாரும்
கண்ணமர் நெற்றியினாரும்,
காதமரும் குழையாரும்,
எண்ண மருங் குணத்தாரும்,
இமையவர் ஏத்த நின்றாரும்,
பண்ணமர் பாடலினாரும்,
பாண்டிக் கொடுமுடியாரே

என்பது சம்பந்தர் தேவாரம். கோயிலில் உள்ள காளிகா தாண்டவத் திருவுருவின் முன் நின்று இப்பாடலைப் பாடித்தான் பாருங்களேன். அவர் நம்மோடு பேசத் தயங்க மாட்டார் என்பதனைக் காண்போம். பண்ணமைந்த பாடலால் சம்பந்தர் பாடினார். அப்பரோ,

சிட்டனை, சிவனைச்
செழுஞ் சோதியை
அட்ட மூர்த்தியை
ஆலநிழல் அமர்