பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/283

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

269

சமானம் என்பதற்கு இந்தப் பெயர் இணைப்புத்தான் முக்கியம் என்றால் பெதிக்லாரன்ஸ் பிறப்பதற்கு எவ்வளவோ காலத்துக்கு முன்பே தமது கடவுளர் நமக்கு வழிகாட்டியிருக்கிறார்களே. நாம் வழிபடும் மூர்த்திகளில் பெரும்பாலோர் அம்மையப்பனாகத்தானே இருக்கிறார்கள். அவர்கள் பெயரும் உமா மஹேஸ்வரன், லட்சுமி நாராயணன், சீதா ராமன் என்றுதானே இருந்திருக்கின்றன. பெயரை

மாத்திரந்தானா தங்கள் பெயருடன் கொண்டிருக்கிறார்கள்? அவர்களது வடிவையே தங்கள் வடிவில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்களே. மனைவியைப் பாகத்தில் வைத்துக் கொள்கிறான் ஒருவன், ஆகத்தில் வைத்துக் கொள்கிறான் ஒருவன், என்? நாவிலேயே வைத்துக் கொள்கிறான் மற்றொருவன். திரிமூர்த்திகளின் கதையே இவ்வளவினதென்றால் இம் மூர்த்திகளை வணங்குகின்றவர்களாகிய நாமா நம் மனைவியை சஹ தர்ம சாரிணிகளாக வைத்துக் கொள்ளத் தயங்கப்போகிறோம்?' என்று எதிர்க் கேள்வி போட்டேன், பேச்சாளரிடம். உண்மைதானே. இம் மூர்த்திகளெல்லாம் நமக்கு நல்ல வழிகாட்டிகளாக அல்லவா அமைந்திருக்கின்றனர். அதிலும் பாகத்திலேயே வைத்துக் கொண்டிருக்கிறானே அந்த