பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/311

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

297

மலைமேவு மாயக் குறமாதின்
மனமேவு வாலக் குமரேசா!
சிலை வேட சேவல் கொடியோனே
திருவானி கூடற் பெருமாளே?

பவானியே வானி என்று குறுகி நிற்கிறது. இதற்குச் சங்ககால இலக்கியத்திலேயே ஆதாரம் இருக்கிறது. இங்குள்ள கல்வெட்டுக்கள் அனந்தம். மும்முடிக் கெட்டி முதலியார் பரம்பரையினரே கோயிலின் பெரும் பகுதியைக் கட்டியிருக்கிறார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் சிருஷ்ணராய உடையார் தளவாய் தேவராயன் ஒரு மண்டபத்தைக் கட்டியிருக்கிறான். பின்னும் திருப்பணி பல நாராயண கவுண்டர் என்பவர் செய்திருக்கிறார். இன்றும் திருப்பணி நடக்கிறது. திருப்பணியில் தமிழ் மக்கள் பங்கு பெற விரையவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.