பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/330

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

வேங்கடம் முதல் குமரி வரை

ஊர் ஊரான் தருமனார்
தமர் செக்கில் இடும்போது
தடுத்து ஆட்கொள்வான்
ஆரூரன் தம்பிரான்
ஆரூரன் மீ கொங்கில்
அணி காஞ்சி வாய்ப்
பேரூர்ப் பெருமானைப்
புலியூர் சிற்றம்பலத்தே
பெற்றாம் அன்றே.

கோயிலின் கருவறையையும், அர்த்த மண்டபத்தையும் பார்த்தால் சோழர்கள் கட்டிய கோயிலாகத் தெரிகிறது. கி.பி. பதினோராம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் மகனான ராஜேந்திரன் அரியணை ஏறி இருபத்திரண்டு ஆண்டுகள் கழித்து, இத்திருப்பணியை ஆரம்பித்திருக்கிறான். அர்த்த மண்டபத்தையும் மகா மண்டபத்தையும் கட்டி முடிக்க மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. மகாமண்டபம் கட்ட விழுமிய பட்டன் தனபாலன், கனபாட்டி அரசாண்டார், வீரசேகரதேவன், அகமுடையான் தேவி, சோழப் பிச்சன், அதிகமான் முதலியோர் உதவியிருக்கிறார்கள் என்று கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இப்படி ஆதியில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கோயிலே பின்னர், நாயக்க மன்னர்களால் சுற்றுப் பிரகாரம், முன் மண்டபம், வெள்ளிமன்றம் எல்லாம் கட்டப்பட்டு விரிவடைந்திருக்கிறது.