பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

37

இழை ஒன்று இரண்டு வகிர்செய்த
நுண்ணிடை ஏந்து வள்ளைக்
குழை ஒன்று இரண்டு விழி அணங்கே!
கொண்ட கோபமென்னோ!
மழை ஒன்று இரண்டு கை
மானாபரணன் உன்வாயில் வந்தால்
பிழை ஒன்று இரண்டு பொறாரோ?
குடியில் பிறந்தவரே!

என்று பக்குவமாகப் பாடுகிறார். கதவைத் திறக்கிறாள் அரசி. ஊடல் தீர்கிறது அவளுக்கு. இவ்விரண்டு பாட்டும் எந்தச் சோழ மன்னனைப் பற்றியது என்று பாட்டிலிருந்து தெரியவில்லை. அதனால் பரவாயில்லை. குலோத்துங்கனைப் பற்றி இருந்தால் என்ன? சுவையோடு அனுபவிக்கத் தகுந்தவைதானே.

வே.மு.கு.வ - 4