பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

வேங்கடம் முதல் குமரி வரை

குறுக்கே நின்று தடுக்கும் விந்திய மலையின் கர்வத்தை அடக்குகிறார். விந்தம் அடக்கிய வித்தகர் பின்னர் சோழ நாட்டிலே தம் கமன்டலத்தைக் கவிழ்த்துத் காவிரியைப் பெருக்கெடுக்கச் சொல்கிறார்.

திருக்கல்யாணம் கோலம்-பாபநாசம்

அதன்பின் பொதிய மலை வந்து பொருநை என்னும் தாமிர பருணியையும் உற்பத்திச் செய்து அந்நதிக் கரை யிலேயே தமிழ்ச் சங்கம் ஒன்று நிறுவித் தமிழ் வளர்க்கிறார். 'என்றுமுள தென் தமிழை